பசுந்தாள் உரங்கள்

பசுந்தாள் உரப் பயிர்களான சணப்பு, தக்கைப்பூண்டு, மணிலா அகத்தி ஆகியவை, காற்றில் உள்ள நைட்ரஜனை தன்னுள் நிலைநிறுத்தி, மண்ணின் வளத்தை மேம்படுத்தும்.

  • தக்கைப்பூண்டு மற்றும் கொழிஞ்சி பயிர்கள், நிலத்தின் அமில, காரத் தன்மையை நீக்கும் தன்மை கொண்டது.
  • இவை மற்ற பயிர்களைப் போல, சான்று பெற்ற விதைகளாக உற்பத்தி செய்யப்படுவதில்லை.
  • ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், மண்வளம் கெடுகிறது.மேலும் யூரியா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. விலையும் அதிகரித்து வருகிறது.
  • ஒரு போக, இருபோக நெல் சாகுபடிக்கு தழைச்சத்து அதிகம் தேவைப்படும்.
  • உழவுக்கு 40 நாட்களுக்கு முன், நிலத்தில் பசுந்தாள் உர விதைகளை விதைக்கலாம்.
  • 40 நாட்கள் கழித்து, அதாவது பூக்கும் பருவத்திற்கு முன், மண்ணோடு சேர்த்து உழுதபின், நெல் சாகுபடிக்கு தயார் செய்யலாம்.
  • ஒரு எக்டேருக்கு 60 -முதல் 70 கிலோ தழைச்சத்தின் பயன்பாட்டை, பசுந்தாள் உரம் ஈடுகட்டும். 20டன் வரை கிடைப்பதால் தழைச்சத்தோடு, சுண்ணாம்பு, நூண்ணூட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன.
  • நிலத்தின் நீர் தேக்கத் தன்மை, மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிக்கிறது.
  • 15 முதல் 20 சதவீத பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
  • நிலத்தை உழும் போது, அடிப்பகுதி அடுக்கில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, மேல்மட்டத்திற்கு கொண்டு வருகிறது.
  • இனி வரும் காலங்களில், இயற்கை வேளாண்மைக்கு வழிகாட்டுவது, பசுந்தாள் உரங்கள் தான்.
  • பசுந்தாள் உர விதை உற்பத்தி குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.

கொ.பாலகிருஷ்ணன், துறைத் தலைவர், ப. மாசிலாமணி, பேராசிரியர்,
விதை நுட்ப அறிவியல் துறை,
மதுரை விவசாயக் கல்லூரி.

Leave a Reply