மேலாண்மை

இயற்கை முறையில் வாழை சாகுபடி

நம் நாட்டில் பலவிதமான வேளாண் பருவநிலை நிலவுவதால், ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்தப் பருவத்துக்கேற்ற வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பூவன், செவ்வாழை, ரொபஸ்டா, மொந்தன், கதலி, ரஸ்தாளி, விருப்பாச்சி பச்சைநாடன், நேந்திரம், கற்பூரவல்லி… போன்றவை தமிழ்நாட்டில் வியாபார ரீதியாகப் பயிரிடப்படும் சில முக்கியமான ரகங்கள். ரகங்களைப் பொறுத்து சாகுபடி காலமும் மாறுபடும். தரமான விதைக்கிழங்கு அவசியம்.…

ஜீவாமிர்தம் இயற்கையான நுண்ணுயிர் கலவை

ஜீவாமிர்தம் எப்படி தயாரிப்பது? தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம்…

இயற்கை முறையில் காட்டாமணக்கு சாகுபடி

“பயோ டீஸல் முக்கியத்துவம் அதிகரித்து வருவதால், அதை உற்பத்தி செய்ய பயன்படும் காட்டாமணக்கு செடிகளை விவசாயிகள் நடவு செய்ய வேண்டும்” என, வேளாண் உதவி இயக்குனர் பேபிகலா தெரிவித்துள்ளார். நம் நாட்டில் உயர்ந்து கொண்டே வரும் பெட்ரோல், டீஸல் விலை காரணமாக மாற்று எரிபொருளாக பயன்படும் பயோ-டீஸலின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பயோ-டீஸல் காட்டாமணக்கு விதையிலிருந்து…

தென்னை சார்ந்த அரசின் திட்டங்கள்

  தமிழ்நாடு மாநில அரசின் திட்டங்கள் 1 தென்னங்கன்றுகளை வழங்குதல் 1)     நெட்டை கன்றுகளை வழங்குதல் –  ரூ.15/கன்று 2)     நெட்டை x குட்டை கன்றுகளை வழங்குதல் – ரூ.25/கன்று 3)     குட்டை x நெட்டை கன்றுகளை வழங்குதல் – ரூ.75/கன்று பயன் பெறுவதற்கான தகுதி: மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் (நீலகிரி மாவட்டம் தவிர) தென்னங்கன்றுகள் வழங்கப்படும். அணுகவேண்டிய…

மா – வறண்ட மண்ணில் அசத்தும் அல்போன்சா

விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன். வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என பலவகை மரங்களை வளர்த்து வருகிறார்.வறட்சியில் இந்த கிராமம் தத்தளித்த போது பிழைப்புக்காக வேறு ஊருக்கு புலம் பெயர்ந்த இவர் பல…

உரமில்லை… மருந்தில்லை… நீரில்லை ஆனாலும் விளையுது நெல்லு

பசிக்க பசிக்க கொடுத்தால் வயிறு கெடாது; வாழ்வும் கெடாது. நெல்லுக்கும் அப்படித் தான். கொடுக்க கொடுக்க தண்ணீரை குடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதையும் அவ்வப்போது காயவிட்டு தண்ணீர் காட்டினாலும் விளைச்சல் கிடைக்கும் என்கிறார் மதுரை மேற்கு ஒன்றியம் குலமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில். ஐந்தாண்டுகளாக வானத்தை பார்த்து நெல்லைத் தூவி நஷ்டமில்லாமல் விவசாயம் செய்து…

பார்த்தீனியத்தை பற்றி மேலும் கொஞ்சம்

பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட…

முப்போகம் பலன் தரும் திசு வாழை

விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை…

இஞ்சி வளர்ப்பு – இயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி

இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக…

வறண்ட பூமியில் சந்தன மரம்

வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம். அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம்…