பருத்தியில் இயற்கை வேளாண்மை

http://tamil.oneindia.in/img/2012/03/12-cotton11-300.jpg

பருத்தி இந்தியாவின் மிகவும் முக்கியமான இழைப்பயிர் ஆகும்.இது வேளாண்மை மற்றும் தொழில்துறை பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத பங்கினை வகிக்கிறது இது ஜவுளி தொழில்துறையின் முதுகெலும்பாக உள்ளது. கணக்கீட்டின் படி 70% நுகர்வு ஜவுளி துறையிலும் 30 சதவீதம் நாட்டின் ஏற்றுமதியிலும் உள்ளது. இதன் வர்த்தகம் ரூ.42,000 கோடிகளாகும்.இந்தியாவின் பருத்தி விவசாயம் 8.9 மில்லியன் ஹெக்டரில் நடைபெறுகிறது. இது உலகளவில் அதிகமான பரப்பளவாகும்.மேலும் இது உலக பரப்பளவில் 25% மற்றும் ஏழு மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

அங்கக பருத்தி வேளாண்மையின் நன்மைகள்

அ)சுற்று சூழலுக்கு இணக்கமான தொழில்நுட்பம்

  • மரபு வழி வேளாண்மையில் அதிகப்படியான இரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவதினால் வேளாண் சுற்று சூழலின் அனைத்து அங்கங்களும் மாசு அடைகிறது.அங்கக பருத்தி உற்பத்தியில் அனைத்து இடுபொருட்களும் இரசாயனம் சாராத பொருட்கள்.மேலும் இவை சுற்றுப்புற சீர்கேடுகளின் பாதிப்புகளை குறைக்கிறது.
  • நூல்இழைகளில் பூச்சி மருந்துகள் படிந்திருப்பதினால் உபயோகிப்பாளர்களுக்கு பக்க விளைவுகளை உண்டாக்கும்.இயற்க்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அங்கக வேளாண்மையில் இயற்கையான நோய் கட்டுப்பாட்டு முறைகளை கையாளுவதாலும் இத்தகைய விளைவுகளை ஏற்படுத்துவது இல்லை.
  • ஜவுளி தொழிற்சாலைகள் மற்றும் சாயப் பட்டறைகளினால் அதிக அளவில் வெளியிடப்படும் சுத்திகரிக்காத மற்றும் மறு சுழற்சி செய்யப்படாத கழிவுநீர் மனிதர்களுக்கு உடல்நல குறைவை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, கால்நடைகள் மற்றும் ஆறுகள்,கால்வாய்களிலுள்ள மீன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.இருப்பினும் இத்தகைய மாசுபட்ட நீரை பருத்தி பயிர்களின் பாசனத்திற்க்கு உபயோகப்படுத்துவதினால் மகசூல் இழப்பினையும் ஏற்படுத்துகிறது.
  • மண்ணில் உள்ள நன்மை செய்யும் உயிர்களை பாதிப்பதினால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன், பருத்தியில் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்க்கையான ஒட்டுண்ணிகள் மற்றும் பறவையினங்களின் எண்ணிக்கையை குறைத்து சமநிலையை பாதிக்கிறது. அங்கக வேளாண் சுற்றுப்புற சூழல்களின் பல்வேறு அங்கங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதின் மூலம் இயற்கை சமநிலைக்கு உதவுகிறது.

ஆ) உற்பத்தி செலவுகளை குறைக்கிறது

நவீன உற்பத்தி தொழில்நுட்பங்கள் பருத்தி உற்பத்தியில் செலவு – ஆதாய விகிதத்தை குறைக்கிறது.ஆந்திரா, பஞ்சாப், மகாராஷ்டிரா,போன்ற மாநிலங்களின் விவசாயிகள் மிக அதிகப்படியான உற்பத்தி செலவுகளால் பருத்தி விவசாயத்தில் குறைந்தபட்ச லாபத்தினைக் கூட பெற முடியாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.மற்றொருபுறம் அங்கக வேளாண்மை கிராமப்புற வேலை வாய்ப்புகளை அதிகரிக்கிறது மேலும் பண்ணை உள்ள வளங்களை பயன்படுத்துவதினால் இது செலவுகளை மேலும் குறைக்கிறது.

இ) பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் மேலாண்மை

பருத்தியில் நோய்களை தடுப்பதற்காக தொடர்ச்சியாக தீங்கு விளவிக்கும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதினால் பூச்சிகள் அதிக எதிர்ப்ப திறன் பெற்று விடுவதினால் தொடர்ந்து அதிக முறை பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது இவைகள் உற்பத்தி செலவுகளை அதிகப்படுத்துகிறது.அங்கக வேளாண்மை இந்த முறைக்கு எதிர் மாறானது.பருத்தியில் அங்கக வேளாண்மை முறையினை பின்பற்றுவதற்காக ஏராளமான பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ஆதாரமாக உள்ளது.
பருத்தியில் அங்கக வேளாண்மைக்கான அனுகுமுறையில் இராசயன மருந்துகள் இல்லத ஒரு முறையான அங்கக வேளாண்மை பருத்தி உற்பத்தியில் முதன்மையான இடம் பெறுகிறது.இந்த விவசாய முறையில் கவனத்துடன் மூலக்கூறுகள் அங்குள்ள வளங்கள்,வேளாண் சூழ்நிலை சிறப்பியல்பகள் மற்றும் சமூக பொருளாதார கட்டமைப்பு போன்ற தகவல்களை கொண்டு பொருத்தமான முறைகள் உருவாக்கப்படுகின்றன. அவை கீழ்க்கண்டவாறு.

1.இடத் தேர்வு

அங்கக வேளாண்மைக்கு கடுமையான மண்ணரிப்பினால் பாதிக்கப்பட்ட இடங்களும்,வருடம் முழுவதும் களைகள் நிறைந்துள்ள நிலங்களும் பயனளிக்காது.அங்கக வேளாண்மை என்பது நடைமுறையில் உள்ள சாகுபடி முறைகளை புறக்கணிப்பதோ அல்லத மாறுபட்டதோ அல்ல,எனவே வளம் குறைந்த மண்ணை நன்கு வளப்படுத்திய பிறகே அங்கக வேளாண்மையை கடைபிடிக்க முடியும்.

2. ரகத்தை தேர்வ செய்தல்

அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகங்கள் இராசயன உரஙக்களக்கே அதிக விளைச்சலை தரக்கூடியது அங்கக வேளாண்மைக்கு உகந்தது அல்ல,பாரம்பரியமான மற்றம் அங்கக வேளாண்மைக்க பொருத்தமான ரகங்களை தேர்வு செய்யவும்.நோய் எதிர்ப்புதிறன் மிக்க ரகங்கள் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். குறைவான வயதுடை ரகங்கள் ஓரளவிற்கு ஏற்புடையது மேலும் காய்புழு தாக்குதலும் பாதிப்பும் குறைவும்.

3. நடவு மற்றும் விதை அளவு

அமிலத்தில் நனைக்கப்பட்ட விதைகளை சர்வதேச விதிமுறைகளின்படி (1 FOAM) பயன்படுத்த கூடாது.அங்கக சாகுபடியில் உற்பத்தியில் செய்யப்பட்ட இழைக்காக சான்றிதழ் பெறமுடியாது.இருப்பினும் அங்கக வேளாண்மையின் மூலம் சாகுபடி செலவுகளை குறைத்து இலாபத்தை அதிகரிக்க விவசாயிகள் அமில நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உபயோகித்து விதையின் மூலமாக பரவக்கூடிய நோய்களை தவிர்த்து தரமான பயிர் வளர்ச்சியை பெறமுடியும்,விதை நேர்த்தி செய்யப்பட்டாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான பயிர் எண்ணிக்கையை பெற முடியும்,விதை நேர்த்தி செய்யப்படாத விதைகளை பயன்படுத்தும் பொழுது சரியான  பயிர் எண்ணிக்கையை பெற அதிக அளவிலான விதைகளை பயன்படுத்த வேண்டியிரக்கும் ஒரு ஹெக்டரில் 75×15 செ.மீ இடைவெளியில் 25 கிலோ விதைகளை பயன்படுத்தும் பொழுது 85 லிருந்து 90 ஆயிரம் செடிகளை ஒரு ஹெக்டரில் பெற முடியும். இரண்டு வரிசை பருத்தி செடிகளின் நடுவே ஒரு வரிசை தீவனதட்டை பயிரினை நடவு செய்ய வேண்டும். இது பருத்தி செடி பூப்பதற்கு முன்பாக செய்யப்பட வேண்டும்.

4) உரமிடுதல்

சரியான உற்பத்தியை பெற, மண்வளத்தை பராமரிப்பதும் படிப்படியாக உயர்த்துவதும் அவசியம். பருத்தியில் அங்கக சாகுபடிக்கு மண்ணின் அங்கக சத்துக்களை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மிகவும் முக்கியமானது. இவைகள் மண்ணின் பெளதிக தன்மையை அதிகிரிக்கிறது, மண்ணின் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது மேலும் சத்துக்களை அளிப்பதையும் மேம்படுத்துகிறது. இதற்கு அதிக அளிவலான தொழுவுரங்களை இடுவதன் மூலம் பருத்தி பயிருக்கு தேவையான சத்துக்களை கிடைக்கச் செய்யலாம். பொதுவாக தொழுவுரங்களை இல்லாத பொழுது பல்வேறு வகையான உயிர் உரக் கலவைகளை உபயோகிக்கலாம். இயற்கை உரங்களான (தொழுஉரம், கலப்புஉரம், மண்புழுஉரம்) பசுந்தாள் உரங்கள், தானிய பயிர்கள் மற்றம் உயிர் உரங்கள் உடன் மண்வளத்தை திரும்ப பெற ஏதுவான பயிர் சுழற்சி முறைகள் ஆகியன மண்வளத்தை பராமரிக்கும் அங்கங்களாகும்.

அ) தொழுவுரம்

தொழுவுரம் 15 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவுக்கு முன்னர் நிலத்தில் இட்டு நன்கு கிளரி விட வேண்டம். தொழுவுரம் நன்கு மக்கியதாக இருக்க வேண்டும். மேலும் உயிர் உரமான டிரைகோடர்மா விரிடியுடன் கலந்து இருப்பது சிறப்பு. வருடங்களில் மண்வளம் மேம்படுத்தப்பட்டவுடன் இந்த அளவை 5-10 டன்/ஹெக்டருக்கு  என்ற அளவில் படிப்படியாக குறைக்கலாம்.

ஆ) தீவனதட்டைப்பயிர்

நடவு செய்த 40 நாட்களுக்கு பிறகு பசுந்தாள் பயிர்களுடன் தீவன தட்டைபயிரை நடவு செய்ய வேண்டும்.இது பயிர் வளர்ச்சி பருவத்தின் பொழுதும்,பயிர் பூக்கும் தருணத்திலும் பருத்தி பயிருக்கு தேவையான தழைச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்கிறது.இது மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தையும் துரிதப்படுத்துகிறது.கறைசலைக் கட்டுப்படுத்தி இயற்கை நோய் கட்டுப்பாட்டு அமைப்பினை மேம்படுத்துகிறது. சாகுபடியின் மூலம் 400-500 கிலோ/ஹெக்டர் காய்ந்த சருகுகளுடன் 2.5% தலைச்சத்து மற்றும் 10-12 கிலோ/ஹெக்டர் தலைச்சத்துக்களை கொடுக்கிறது. இதன் மூலம் கூடுதல் நன்மைகளாக களைக் கட்டுப்பாடு,மண் அரிப்பினை தடுத்தல்,மற்றும் பருத்தியின் நோய்களுக்கு இயற்கையான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகியன பெறப்படுகிறது.

இ) தக்கை பூண்டு

தக்கை பூண்டு பார்வை பருத்தி தோட்டத்தை சுற்றிலும் இரண்டு மீட்டர் அகலத்தில் வளர்ந்து நட்ட 65-70 நாட்களில் அறுவடை செய்து பருத்தி செடியின் வரிசைகளுக்கு இடையே பரப்பும் பொழுது இது பயிர் தண்டு வளர்ச்சிக்கு தேவையான தலைச் சத்தினை அளிக்கிறது.மேலும் தண்டுகள் விரைவில் மக்க கூடியவை.மேலும் மண்ணின் ஈரப்பதம் அழிவதையும் தடுக்கிறது.

ஈ) மண்புழு உரம்

தொழுவுரத்துக்கு மாற்றாக மண்புழு உரத்தினை 1.2 டன் /ஹெக்டர் என்ற அளவில் நடவு வரிசைகளின் போட்டு நடவு செய்ய வேண்டும். மண்புழு உரம் பல்வேறு நுண்ணூட்டங்களுக்கு அடித்தளமானது. மேலும் இது பயிர் வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ புளோரா என்னும் அமிலத்தைக் கொண்டுள்ளது. மேலும் இது மண்ணின் கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் ஏதுவாக அமைகிறது.

உ) உயிர் உரங்கள்

நடவின் பொழுது விதைகளை அசிட்டோ பாக்டர் அல்லது அசோஸ்பியரில்லம் 200 கிராம் / ஏக்கர் என்ற அளவில் கலந்து விதைக்க பரிந்துரைக்கப்படுகிறது.

5) கலப்பு உரத்திற்கான தொழில்நுட்பங்கள்

1. மண்புழு உரம்

சுயசார்புடைய பசுந்தாள் உரங்கள் மற்றும் தொழுவுரம்  ஆகிய மண்ணின் அங்ககத் தன்மையை அதிகரிக்கும் காரணிகளாகும்.இருப்பினும் சி சூழ்நிலைகளுகடகு இவைகளால் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடிவதில்லை.ஏராளமாந மண்ணின் கழிவுகள் மற்றும் தாவர பொருட்கள் வெருமனே எரிக்கப்படுகின்றன. இதற்காக  பண்ணைக் கழிவுகள் மற்றும் தாவர பொருட்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் உபயோகப்படுத்த முடியும். நவீன கருத்துக்களின் அடிப்படையில் மண்புழுக்கள் மற்றும் பூஞ்சானங்கள் இந்த சுழற்சிக்கு பயன்படுகின்றன.இந்திய மண்புழு இனத்தை சேர்ந்த எசேனியா புடிடா என்ற இனம் பண்ணைக்கழிவுகளை ஒருமாத காலத்தில் மண்புழு உரமாக மாற்றிவிடுகிறது. மேலும் பாலிதீன் தவிர மற்றவைகளை மக்கச் செய்துவிடுகிறது.

மண்புழு உரம் தயாரிக்க 15-25 செமீ உயர படுக்கையினை தயார் செய்ய வேண்டும். இந்த படுக்கையின் நீள அகலம் பண்ணைக் கழிவுகளில் கிடைப்பதை பொருத்து அமைத்துக் கொள்ளலாம். இந்த படுக்கைகள் நடுவில் உயர்ந்தும் பக்கவாட்டில் சரிவாக இருக்குமாறும், (வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக) கூடுமானவரை நிழலில் இருக்குமாறும்அமைத்துக்கொள்ள வேண்டும். மண்புழுக்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. அதனால் படுக்கைகளை மூடி வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது.மேலும் இருளானது மக்கும் காலத்தைக் குறைக்கிறது.
படுக்கையின் மூதல் அடிக்கில் லேசான பொருட்களான கோதுமை/சோயபீன் தோலினை அடுக்கவும். பின் சாண கரைசலை லேசாக தெளிக்கவும்.

ஒரு கிலோ மண்புழுக்களை 10 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலம் உள்ள படுக்கையில் விடவும். இதற்கு மண்புழு முட்டைகள் அல்லமு மண்புழு உரத்தில் உள்ள கரிய மண்புழுக்களையே உபயோகப்படுத்தலாம். களைகள், நறுக்கிய இலை, தழைகள், பண்ணைக் கழிவுகள், வீட்டுக்கழிவுகள்ி மற்றும் மற்ற மக்க சுடிய பொருட்கள் அனைத்தையும் இந்த படுக்கையின் மீது போட்டுக் கொள்ளவும். இந்த படுக்கையை லேசான ஈரப்பதம் இருக்குமாறு அடிக்கடி நீரை தெளித்து வர வேண்டும். ஆனால் நனைந்து விடக் கூடாது. இதற்கு உகந்த ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை (27-330செ) மக்க எடுத்துக் கொள்ளும் காலம் 40-50 நாட்கள். மண்புழுவின் எச்சத்தில் தோராயமாக 1.2-1.4% மணிச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இந்த சத்தக்கள் படுக்கை மற்றும் மக்க வைக்கப்படும் பொருட்களை பொருத்து மாறுபடும். மண்புழுவின் எச்சத்தில் அது எடுத்துக்கொள்கின்ற பொருட்களைவிட தழைச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கியுள்ளது.

ஆ) பருத்தி செடியின் தண்டுகளை டிரைக்கோடெர்மா விரிடியின் மூலம் மக்கச் செய்வது

பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன. இந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில்  மக்கச் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு: 10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும். இதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும்.

இந்த தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப லேசான பண்ணை கழிவுகளான சோள தட்டைகள், கொடிகள், சோயாபீன் போன்றவை கொண்டு நிரப்ப வேண்டும். (பருத்தி செடியின் தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப) மற்றும் 50 கிலோ சாணமட (இது ஆரம்ப நிலையில் பூஞ்சாணங்கள் பெருக உதவி புரியும்) ஒவ்வொரு அடுக்கிலும் 60 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூள் மற்றும் அரைக் கிலோ வெல்லம் மற்றும் 15 கிராம் ஈஸ்ட் புவுடரை கலந்து தெளிக்க வேண்டும். இந்த குழியை சணப்பை செடியின் தண்டுகளான கொண்டு மூட வேண்டும். இது நீர் ஆவியாவதை தடுக்க உதவும். குழியில் தேவையான ஈரப்பதம் நிலவ அடிக்கடி தண்ணீரை தெளிக்க வேண்டும். குழியில் உள்ளவை நன்கு மக்கிய பின்னரே குழியை திறக்க வேண்டும்.

இதற்க நான்கு மாக காலம் தேவைப்படும் பிறகு பெரும்பாலான பருத்தி தண்டுகள் மக்கிவிடும். மற்றவை (20%) மட்டுமே கருப்பாக பகுதி மக்கிய நிலையில் காணப்படும். இந்த மக்கிய உரமானது நன்கு மக்கிய மண்புழு உரத்திற்கு சமமானது. இது நுண்ணோட்ட மறுசுழற்சிக்கும்  உதவுகிறது மற்றும் மண்ணில் உள்ள சில நோய் கிருமிகளையும் அழிக்கிறது.

6) களை மேலாண்மை

அங்கக வேளாண்மையில் நிலத்தில் கோரை, அறுகம்புல், ஏறுலை போன்ற நிரந்தரமான களைகளை கட்டுப்படத்தாவிடில் அங்கக வேளாண் முறையில் கட்டுப்படுத்துவது கடினம். இருப்பினும் இத்தகைய களைகளின் வேர்கள், கிழங்குகள் போன்ற மண்ணுக்கு அடியுள்ளவற்றை கோடையில் உழவின் போது வெளிப்படுபவற்றை கையினால் அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு இயந்திரங்களைக் கொண்டோ அல்லது மனிதர்களைக் கொண்டோ களைகளை அப்புறப்படுத்தலாம். இந்த களைகளை மக்க வைப்பதன் மூலம் மறுசுழற்சி செய்து தொழுவுரமாக பயன்படுத்தமுடியும். ஆனால் இந்த களைகள் நிரந்தரமான களைகள் என்பதால் முழுவதுமாக மக்க வைத்தே பின்பே தொழுவுரமாக பயன்படுத்தப்பட வேண்டும். தட்டைப் பயிறினை இரண்டு வரிசை பருத்திச் செடிகளுக்கு நடுவே வளர்பதன் மூலம் களைகளை கட்டுப்படுத்த முடியும்.

7) சுழற்சி முறையினை தேர்ந்தெடுத்தல்

மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் தாக்குதல் மற்றும் களைகளை கட்டுப்படுத்தவும் பயிர்சுழற்சி முறை அவசியமானதாகும். அதிக சத்துக்களை எடுத்துக்கொள்கின்ற பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைப் பயிர்களை தவிர்த்து அந்த பகுதிக்கு ஏற்ற பயிர்வகைகளைப் பயன்படுத்தலாம்.

8) பயிர் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு யுக்திகள்

பயிர் பாதுகாப்பு முறைகள் நோய்களின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கின்றன. பருத்தியின் அங்கக வேளாண் முறைகளுக்கு உகந்ததான இயற்கையான பாதுகாப்பு முறைகளான பூச்சிகளை உண்டும் பூச்சிகளான சர்சோ பேர்லா அல்லது அபர்ஆடாசர்சா போன்றவைகளின் ஒட்டுண்ணி முட்டைகளான டிரைகோடெர்மா ஒட்டுண்ணி பூச்சிகளான ஹப்ரோபரகோன் அல்லது உயிர்கொல்லி உயிரினங்களான ஹெகவோபா, ஆர்மிகாராஈ என்.வி.பி மற்றும் பாக்டிரியும், போகிலாஸ் கிரிங்யுஞ்சாஸ்வர் குறுஸ்டகி கலவைகள் பறவையினங்களின் உபயோகப்படுத்துவது  மற்றும்  தாவர பூச்சிக் கொல்லிகளான வேம்பு பொருட்கள் ஆகியவற்றை உபயோகப்படுத்தலாம்.

இயற்கை கட்டுப்பாடு முறைகளை உபயோகிக்கும் பொழுது பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. இது பருத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்கும். இயற்கை கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடிக்க முதலில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும். இலைகள் பூச்சிகளை அழிப்பதோடு மட்டுமின்றி நன்மை செய்யும் உயிரினங்களயும் அழிக்கிறது. மேலும் மனிதர்களுக்கும் ஏற்றதல்ல. கீழ்கண்ட பயிர் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பருத்தியின் அங்கக வேளாண்மைக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

  1. தகுந்த நோய் எதிர்ப்பு இரகங்களை தேர்வு செய்யவும்.
  2. கிரைபேர்லா 500-1000/ஹெக்டர் என்ற அளவில் பூச்சிகளின் பாதிப்புகளின் அளவைப் பொறுத்துவிட வேண்டும். பின்பு 20-25 நாட்களுக்கு ஒருமுறை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப விட வேண்டும்.
  3. தண்டினை துளைக்கும் புழுக்களை அழிக்கும். முட்டைகளை கொல்லும் டிரைகோசார்டஸ் @ 5/ஹெக்டர் என்ற அளவில் 40-50 நாள்விட வேண்டும். பின்பு 10-12 நாட்களில் மறுபடியும் விட வேண்டும்.
  4. அமெரிக்கன் தண்டுப் புழு தோன்றும் பொழுது ஹெ-என்.பி.வி ரூ.250 கரைசல் அல்லது எல்இ 200 கோடி (109) போலி இன்குளுசன் பாடிஸ் அல்லது பாலி அக்குளுசன் பாடில் சை தெளிக்கவும். சிறந்த கட்டுப்பாட்டு முறைகள் அமைய அதனை 15 நான் இடைவெளிகளில் தெளிக்கவும். இதை மாற்ற பயிர்களுக்கும் மாற்று கட்டுப்பாட்டு முறையாக ரூ. 1.51/ ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.
  5. பூக்கள் மற்றும் இலைகள் மற்றும் தண்டுகளை தாக்கும் புழுக்கழள அழிக்க ஹெப்புரோரொகான் ஹெபிடோடர்யை விட வேண்டும். இவைகளால் சிறந்த கட்டுபாட்:டு சூழலை ஏற்படுத்த முடியும்.
  6. ஒரு ஹெக்டரில் 3-6 பறவைகள் அமரும் மர கொம்புகளை நட்டுவைப்பதன் மூலம் பறவைகளின் வரவு அதிகரித்து பூச்சிகளின் தாக்குதல் குறையும்.
  7. வேம்பு சார்ந்த தாவர பூச்சிக் கொல்லிகள், கொட்டை சாறு 5% லி/லி அல்லது எண்ணெய் 1% தெளிப்பது பயிரை தாக்கும் பூச்சிகளை சிறப்பாக கட்டுப்படுத்தும்.
  8. பூச்சிகளின் நடமாட்டத்தை கவனிப்பதால் கவர்ந்து இழுக்கும் பொறிகளைக் கொண்டு காய்ப்புழுக்களை கவர்ந்து அழிக்க முடியும்.
  9. மற்றொரு முக்கியமான நடைமுறை தொழில்நுட்பமான பருத்தி பயிரினை 30 நாட்கள் தாண்டிய பின்னரும் வளர்ப்பது காய்புழுக்களின் முட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கும்.