பார்த்தீனியத்தை பற்றி மேலும் கொஞ்சம்

பல தென்னந்தோப்புகளில் விவசாயிகள் பார்த்தீனியத்தை ஒரு எதிரியாக பாவித்து அதனை கங்கணம் கட்டிக்கொண்டு அழித்திட அதிக காசு செலவு செய்து களைக்கொல்லி மருந்து தெளித்து கடும் நஷ்டத்துக்கு ஏன் மண்ணின் உயிர்க்குலங்கள் நாசமாகி மலடாகி தென்னந்தோப்பே வறண்ட காடு போலக்காட்சியளித்திடச் செய்கிறார்கள். இறைவன் தந்த வரங்கள் தான் தாவரங்கள். அதில் தானாக வளரத் திறன் கொண்ட…

முப்போகம் பலன் தரும் திசு வாழை

விவசாயத்தை பெரிதாக நினைத்து வாழ்ந்த விவசாயிகள் எல்லாம் அவற்றை பிளாட் போட்டு விற்று வருகின்றனர். விளை நிலத்தை சீரமைத்து வாழை விவசாயம் மூலம் வருமானத்தை பெருக்கி வருகிறார் காரைக்குடி, அரியக்குடி வளன் நகர் விவசாயியும் முன்னாள் ராணுவ வீரருமான ஆரோக்கியசாமி.மொத்தமுள்ள 4 ஏக்கரில் ஒரு ஏக்கரில் வாழை, 1.5 ஏக்கரில் நெல், ஒரு ஏக்கரில் தென்னை…

இஞ்சி வளர்ப்பு – இயற்கை வேளாண்மையில் இஞ்சி சாகுபடி

இஞ்சி சாகுபடியில் நிலத்தின் வளம்/நலம் பேணுவது மிக முக்கிய செயலாகும். நிலத்தில் அங்ககப் பொருட்களின் அளவு கூடுதலாக இருப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக கால்நடைக் கழிவுகளான தொழுஉரம் அல்லது ஆட்டுக்குப்பை அல்லது நன்கு தயாரிக்கப்பட்ட கம்போஸ்ட் அல்லது மண்புழு உரம் நிலத்தில் கடைசி உழுவில் இட வேண்டும். கம்போஸ்ட் அல்லது தொழு உரமாக…

மணக்கும் மல்லிகை மயக்கும் வருமானம்

கரும்பு பயிரிட்ட இடத்தில் தற்போது மல்லிகை தான் வருமானம் தந்து காக்கிறது, என்கிறார் மதுரை சத்திரப்பட்டி மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மல்லிகை விவசாயி ரெங்கநாதன். பி.எஸ்சி., இயற்பியல் படித்த இவர், மணக்கும் மல்லிகையின் மயக்கும் வருமானம் குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 15 ஆண்டுகளுக்கு முன் வரை, நெல், கரும்பு சாகுபடி தான் செய்து வந்தேன். மனைவி…

வறண்ட பூமியில் சந்தன மரம்

வறண்ட பூமியான சிவகங்கையில் சொட்டு நீர் பாசனம் மூலம் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார் நாட்டரசன்கோட்டை விவசாயி செல்வம். அவர் கூறியதாவது: நாட்டரசன்கோட்டை அருகே மாங்காட்டுப்பட்டியில் 10 ஏக்கரில் பரிட்சார்த்தமாக சந்தன மரம் நடும் முயற்சியில் இறங்கினேன். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டமாக இருப்பதால்,தண்ணீரின்றி விவசாயம் செய்வது கடினம். இருப்பினும் சொட்டு நீர் பாசனம்…

ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் தரும் கேந்தி மலர் சாகுபடி

“உழுதவன் கணக்கு பார்த்தால் தார் கம்பு கூட மிச்சமாகாது” என்பது கிராமப்புற விவசாயிகள் கூறுவதுண்டு. ஆனால் இவற்றை எல்லாம் பொய்யாக்கி ஏக்கருக்கு 4 லட்சம் வருமானம் எடுக்கிறேன் என்று கர்வத்துடன் கூறுகிறார் ஒரு சாதனை பெண் விவசாயி சிவகாமி விருமாண்டி. எப்படி: இவர் வருடந்தோறும் கேந்திமலர் சாகுபடி செய்கிறார். ஈஸ்வெஸ்ட் நிறுவனத்தின் “”மேக்சிமா எல்லோ வீரிய…

‘மா’வைக் காக்க அற்புத இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இயற்கை வேளாண்மை செய்து வரும் விவசாயிகள் தனது நிலத்திற்கு “அங்ககச் சான்று’ பெற முன்வர வேண்டும். இந்த உத்தி மூலம் ஏற்றுமதி செய்தும் லாபம் பெற வழி உள்ளது. குறிப்பாக “அல்போன்சர்’ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி…

இயற்கை முறை நாவல் சாகுபடி

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி.ஐ.ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன. சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும். அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன. இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம், ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல்,…

தேசிய விதை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்

இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்புமிகு பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில்…

வருமானம் தரும் கோரை களை

கோரை என்பது உலகெங்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு களை ஆகும். இது உலகின் “”மிகவும் மோசமான களை” என்று வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. உலகின் 92 நாடுகளில் இது மிகவும் பிரச்னைக்குரிய களையாகும். கரும்பு, நெல், காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிர்களை மிகவும் பாதிக்கிறது. ஆனால் கோரையின் கிழங்குகள் மருத்துவக் குணம் உடையதாகையால்…